பேர்ணாம்பட்டு அருகே கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றனர்.
பேர்ணாம்பட்டை அடுத்த பக்காலபல்லியில் அமைந்துள்ளது வன்னியநாத ஈஸ்வரர் கோயில். இக்கோயிலில் பிரதோஷம், பௌர்ணமி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறும். புதன்கிழமை இரவு மர்ம நபர்கள் கோயிலில் நுழைந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், பேர்ணாம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.