அம்பேத்கர் பேனர் மீண்டும் கிழிப்பு: 2-வது நாளாக சாலை மறியல்

வேலூர் அருகே அம்பேத்கர் பேனர் மீண்டும் கிழிக்கப்பட்டதால் 2-ஆவது நாளாக பொதுமக்கள் வியாழக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் அருகே அம்பேத்கர் பேனர் மீண்டும் கிழிக்கப்பட்டதால் 2-ஆவது நாளாக பொதுமக்கள் வியாழக்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் அருகே மூஞ்சூர்பட்டு கிராமத்தில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை பேனர் வைக்கப்பட்டிருந்தது. புதன்கிழமை காலை பார்த்தபோது பேனர் கிழிக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் கிராமிய போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பிறகு கிழிக்கப்பட்ட பேனருக்கு பதிலாக மீண்டும் புதிய பேனர் அங்கு வைக்கப்பட்டது.
இந்நிலையில் புதிதாக வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.  மீண்டும் பேனர் கிழிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு சாலை மறியலில் 
ஈடுபட்டனர்.
தகவலறிந்த வேலூர் வட்டாட்சியர் பாலாஜி அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அவரை முற்றுகையிட்ட பொதுமக்கள் பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com