தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பு: காங்கிரஸார் கொண்டாட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றதை அடுத்து, வாணியம்பாடி நகர காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றதை அடுத்து, வாணியம்பாடி நகர காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
நகரத் தலைவர் பரீத்அஹமத் தலைமையில் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட காங்கிரஸார் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று கச்சேரி சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கும், சி.எல்.சாலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கும் மாலை அணிவித்தனர்.
இதில், மாவட்டத் துணைத் தலைவர் சாந்தகுமார், மாவட்ட இளைஞரணித் தலைவர் பைசல்அமீன், பொதுச் செயலாளர் முஜமீல் அஹமத், சட்டப்
பேரவை இளைஞரணித் தலைவர் முதசீர்பாஷா, மாவட்ட சிறுப்பான்மைத் துறைத் தலைவர் இலியாஸ்கான் மற்றும் நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டையில்...
 ராணிப்பேட்டை முத்துகடை காந்தி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவர் எஸ்.அண்ணாதுரை தலைமை வகித்தார். நிர்வாகிகள் எம்.மோகன சுப்பிரமணியம், புலவர் ரங்கநாதன், ராணி கே.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி வசீகரன் வரவேற்றார். மூத்த நிர்வாகி எஸ்.எம்.முருகேஷ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளர் கே.என்.ஞானசேகரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவர் வி.நாகேஷ், நிர்வாகிகள் கமலக்கண்ணன், சீனி சுகுமார், வலசை பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே காங்கிரஸார் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு, வடக்கு ஒன்றியத் தலைவர் எம்.வீராங்கன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றியத் தலைவர் என்.எஸ்.துரைசாமி வரவேற்றார்.
மத்திய, மாவட்டத் தலைவர் ஜெ.ஜோதி காந்தி, காமராஜ் சிலைகளுக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிர்வாகிகள் கே.ஆர். கண்ணன், ஜி. விஜயேந்திரன், ரஷீத்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூரில்...
ஆம்பூர் பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சரவணன், சோலூர் மாணிக்கம், மின்னூர் சங்கரன், சமியுல்லா உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com