கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்த முகாம்

திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தேர்தல் ஆணையம் இந்த ஆண்டை இளைஞர்கள் ஆண்டாக அறிவித்து உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களை வாக்காளர் பெயர் பட்டியலில் இணைப்பதற்கான விழிப்புணர்வு முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
அதன்பேரில், திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், வட்டாட்சியர் ஸ்ரீராம்  வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கினார்.
அதைத் தொடர்நது காணொலி காட்சி மூலம் பெயர் சேர்க்கை குறித்து விளக்கப்பட்டது.
இதில், மண்டலத் துணை வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் திருமலை, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com