வேலூர் கோட்டை அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோயிலில் அம்பாள் சந்நிதி முன்புள்ள கொடி மரத்தில் ஆடிப்பூர பிரம்மோற்சவ கொடி, கோயில் தலைமை குருக்கள் கனகசண்முகம் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க ஏற்றப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று ஆடி மாதப் பிறப்பை யொட்டி வேலூரில் உள்ள பாலாற்று செல்லியம்மன், சோளாபுரியம்மன், சத்துவாச்சாரி கெங்கையம்மன் உள்ளிட்ட பல கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.