தனிநபர் கழிப்பிடம் : வியாபாரிகள் நன்கொடை

ஆற்காடு நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம் கட்ட  வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ. 70 ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்டது.

ஆற்காடு நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் கழிப்பிடம் கட்ட  வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ. 70 ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்டது.
ஆற்காடு நகரில் 1,314 வீடுகளுக்கு தனிநபர் கழிப்பிடம் கட்ட உத்தேசிக்கப்பட்டு அதற்கான  பணிகள் நடைபெற்றது வருகிறது. இதற்காக பொதுமக்களின் பங்களிப்பான ரூ. 4 ஆயிரம் கட்டமுடியாத பயனாளிகளுக்கு (சி.எஸ்.ஆர்) கூட்டமைப்பு சமூக பொறுப்பு மூலம் ஆற்காடு நெல் அரிசி வியாபாரிகள் சங்கம், காய்கனி அங்காடி வியாபாரிகள் சங்கம், நேதாஜி நகராட்சி கடை உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து ரூ. 70 ஆயிரத்தை நன்கொடையாக நகராட்சி ஆணையர் மாடசாமியிடம் வழங்கினர். அப்போது  நகராட்சி கடை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பி.என்.உதய
குமார்,  நகராட்சி அதிகாரிகள், வியாபாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com