ராணிப்பேட்டை பகுதிகளில் தரமற்ற உணவுப் பொருள் விற்பனை

ராணிப்பேட்டை, சுற்றுவட்டாரங்களில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்கப்படுவதாகவும்,  இதுகுறித்து நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

ராணிப்பேட்டை, சுற்றுவட்டாரங்களில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்கப்படுவதாகவும்,  இதுகுறித்து நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலாவதியான மற்றும் தரமற்ற உணவுப் பொருள்கள்  விற்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும் தமிழக அரசால்  தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை அதிகளவில் நடப்பதாகவும், அதேபோல் உணவகங்களில் உணவு சமைக்கும் இடங்களில் சுகாதாரமற்ற முறையில் சமைக்கப்படுவதாகவும், தரம் குறைந்த சமையல் எண்ணெய் பயன்படுத்துவதாகவும்,  குறிப்பாக அசைவ உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
எனவே மாவட்ட உணவுப் பாதுகாப்புத்  துறை அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் உணவகங்களில் உடனடியாக சோதனை நடத்தி தரமான  பொருள்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா எனவும், தரமான சமையல்  எண்ணெய் பயன்படுத்தப்படுகிறதா எனவும் ஆய்வுசெய்ய  வேண்டும்.   அதேபோல் பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் காலாவதியான மற்றும் தரமற்ற உணவுப்  பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  
சோதனையின் போது,  காலாவதியான மற்றும் தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட கடை  உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com