அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

ஜோலார்பேட்டையில் அடையாளம் தெரியாத முதியவர் சடலத்தை போலீஸார் மீட்டனர்.

ஜோலார்பேட்டையில் அடையாளம் தெரியாத முதியவர் சடலத்தை போலீஸார் மீட்டனர்.
ஜோலார்பேட்டை புதுஓட்டல் தெருவில் கார் நிறுத்தும் இடம் உள்ளது. இதன் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் எனத்
தெரியவில்லை.
இதுகுறித்து ஜோலார்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் மீராதேவி கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com