வேலூர்
சுற்றுலாப் பேருந்து-மாட்டு வண்டி மோதல்: 4 பேர் காயம்
ஆம்பூர் அருகே மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி மீது சுற்றுலாப் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனர்.
ஆம்பூர் அருகே மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி மீது சுற்றுலாப் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனர்.
ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் பாலாற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டு அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாக சென்ற சுற்றுலாப் பேருந்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி ஒன்றின் மீது மோதியது.
இதில், மாட்டு வண்டியில் சென்ற ஆலாங்குப்பத்தைச் சேர்ந்த ரவிதிலகம் (44), சுரேஷ் (23), ஹரீஸ் ( (18), கார்த்திகேயன் (30) ஆகிய 4 பேர் காயமடைந்தனர். மேலும் இரண்டு மாடுகளும் காயமடைந்தன. மணல் வண்டியும் சேதமடைந்தது. இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.