சிகரம் மெட்ரிக். பள்ளி நூறு சதவீதத் தேர்ச்சி

வாணியம்பாடி சிகரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றனர்.

வாணியம்பாடி சிகரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றனர்.
 இப்பள்ளியில் 76 மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் சிகரம் மெட்ரிக். பள்ளி தொடர்ந்து 9-ஆவது ஆண்டாக 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி அளவில் மாணவி ஆர்.கே.சாய்ஸ்ருதி மற்றும் பி.வினிஷா ஆகியோர் 490 மதிப்பெண் பெற்று முதலிடமும், எஸ்.ஹர்ஷிதா 488 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், ஏ.ஆர்.தனுஷா மற்றும் ஜி.அனிதா 487 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.
மேலும் தேர்வு எழுதிய 76 மாணவர்களில் 55 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியின் தலைவர் ஏர்போர்ஸ் மணி, துணைத் தலைவர் சீனிவாசன், செயலாளர் கிருஷ்ணன், இணைச் செயலாளர் பார்த்தீபன், பொருளாளர் ராஜேந்திரன், பள்ளி நிர்வாகிகள், முதல்வர் கல்பனா, மக்கள் தொடர்பு அலுவலர் முகமதிதசின் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com