சாய்பாபா வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு

சாய்பாபா வாழ்க்கை வரலாறு குறித்து இரண்டாம் பாகம் நூல் வெளியீட்டு விழா ஆற்காடு சாய்பாபா கோயிலில் அண்மையில் நடைபெற்றது.

சாய்பாபா வாழ்க்கை வரலாறு குறித்து இரண்டாம் பாகம் நூல் வெளியீட்டு விழா ஆற்காடு சாய்பாபா கோயிலில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அண்ணாமலையார் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கு.சரவணன் தலைமை வகித்தார். அன்னை அறக்கட்டளை செயலாளர் பெல் பிரபு, அண்ணா சிலை சிறு வியாபாரிகள் சங்கப் பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலாசிரியர் ஞானசேகரன் வரவேற்றார். ராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலுவலர் ஆர்.ராஜலட்சுமி பங்கேற்று நூலை வெளியிட்டார். ஆற்காடு நகராட்சி ஆணையர் மாடசாமி முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
இதில் கோயில் நிர்வாகி முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com