கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆம்பூர் கே.ஏ.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமை கல்லூரி முதல்வர் த.ராஜமன்னன் தொடங்கி வைத்தார். நிர்வாக அலுவலர் ஹிரானி சாஹிப், துணை முதல்வர் ஏ.முஹம்மத் ஷாஹின்ஷா, வேலைவாய்ப்பு அலுவலர் எம்.பார்த்தீபன் மற்றும் துறைத் தலைவர்கள் பங்கேற்றனர். வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 25 பேர் கலந்து கொண்டனர். நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com