நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வில் 42 பேருக்குபணி ஆணை அளிப்பு

வேலூரில் நடைபெற்ற நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கான கலந்தாய்வில் 42 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

வேலூரில் நடைபெற்ற நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கான கலந்தாய்வில் 42 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட தொடக்கக் கல்வி துறை சார்பில் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஒன்றியம், ஒன்றியம் விட்டு ஒன்றியத்துக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வேலூர் அண்ணாசாலையில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கு.குணசேகரன் முன்னிலையில் இணைய முறையில் நடைபெற்ற கலந்தாய்வில் 35 பேர் பங்கேற்றனர். இதில் தலைமையாசிரியர்கள் 18 பேருக்கு பணியிட மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் பங்கேற்றவர்களில், 24 பேருக்கு பதவி உயர்வுக்கான உத்தரவு வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com