போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆம்பூர் ஹசனாத்-இ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை பள்ளி நிர்வாகம் திங்கள்கிழமை பாராட்டி கௌரவித்தது.


பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஆம்பூர் ஹசனாத்-இ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை பள்ளி நிர்வாகம் திங்கள்கிழமை பாராட்டி கௌரவித்தது.
ஆம்பூர் ஹசனாத்-இ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் காட்பாடி எஸ்எஸ்ஏ அரங்கில் அண்மையில் நடந்த பேரிடர்களை எதிர்கொள்வது எப்படி என்ற தலைப்பிலான மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் பங்கேற்றனர். அதில் மாணவி நாஜியா மாவட்ட அளவில் 2-ஆம் இடம் பிடித்தார்.  
அதே போல மௌலானா அபுல் கலாம் ஆஜாத் பிறந்த நாளான தேசிய கல்வி நாள் விழாவையொட்டி, வாணியம்பாடி இசுலாமியா கல்லூரியில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.  இதில் பங்கேற்ற ஹசனாத்-இ-ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பங்கேற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.  
வெற்றி பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியை முதஹிரா பேகம், ஆசிரியைகள் தன்வீர், சாந்தி, ஆபிதா, பர்ஹத்தாரா ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com