ராணிப்பேட்டையில் மாத சீட்டு நடத்தி ரூ. 11.59 லட்சம் மோசடி செய்ததாக நகராட்சி துப்புரவு பெண் பணியாளர் கைது செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை நவல்பூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த வரதராஜின் மனைவி பேபி (47). இவர், நகராட்சி துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், அதே பகுதியில் மாத சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் ஏராளமானோர் உறுப்பினர்களாகச் சேர்த்து மாத சீட்டு செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நவல்பூர் மசூதி தெருவைச் சேர்ந்த லட்சுமி உள்பட 7 பேருக்கு சீட்டுப் பணமான ரூ. 11.59 லட்சத்தை கடந்த 3 ஆண்டுகளாக வழங்காமல் காலம் கடத்தி வந்தாராம்.
இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி உள்ளிட்டோர் பேபி மீது ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பேபியை செவ்வாய்க்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.