ஆம்பூர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் புதன்கிழமை இறந்தார்.
ஆம்பூர் அருகே மின்னூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் (20). இவர், புதன்கிழமை இரவு பைக்கில் சென்றார். அப்போது மின்னூர் பகுதியில் சென்ற லாரி பைக் மீது மோதியது. அதில் மோகன் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.