வெள்ளப் பெருக்கில் சிக்கிய ஒருவர் மீட்பு: மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரம்

வாணியம்பாடி அருகே தடுப்பணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய இரு இளைஞர்களில் ஒருவர் மீட்கப்பட்டார். மற்றொருவரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வாணியம்பாடி அருகே தடுப்பணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய இரு இளைஞர்களில் ஒருவர் மீட்கப்பட்டார். மற்றொருவரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபத் பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணையில் பெரியபேட்டை பகுதியைச் சேர்ந்த நண்பர்களான இம்தியாஸ் (20) மற்றும் அல்தாப் (20) ஆகிய இருவரும் குளிக்கச் சென்றனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், இருவரும் சுழலில் சிக்கிக் கொண்டனர்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்டு இம்தியாஸை மீட்டனர். ஆனால், அல்தாப்பை மீட்க முடியவில்லை. தகவலறிந்த வாணியம்பாடி தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கிய அல்தாப்பை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், திருப்பத்தூர் சார்ஆட்சியர் கார்த்திகேயன், வாணியம்பாடி வட்டாட்சியர் முரளிகுமார் மற்றும்  கிராமிய போலீஸார் அங்கு சென்று தேடுதல் பணியை துரிதப்படுத்தினர்.
மாலை 6 மணி வரையிலும் அல்தாப் கிடைக்காததால் பணியை நிறுத்தினர். தொடர்ந்து வெள்ளிக்கிழமை பணியை தொடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com