வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில், பாஜக தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவைக் கண்டித்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மத்திய மாவட்டத் தலைவர் ஜெ.ஜோதி தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெ.தியாகராஜன், ஜி.சுரேஷ்குமார், ஜே.கிருஷ்ணவேணி, ஏ.சனாவுல்லா, நகர தலைவர்கள் வி.ஜோதி, கே.ஆர்.கண்ணன், சுரேஷ்குமார், வட்டாரத் தலைவர்கள் எம்.வீராங்கன், ஜார்ஜ், வாசு, காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.