சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஆம்பூர் பன்னீர்செல்வம் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் செ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஆம்பூர் இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் விஜயலட்சுமி, உமாதேவி, சசிகலா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். ஆசிரியை தேவிபாலா  வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாணவிகள் கவிதை வாசித்தனர். மேலும், பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர். ஆசிரியை சத்தியசீலி நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் சுகன்யா, சரண்யா, சுபேதாபேகம், சசிகலா, ஷகிலா, கீதா ஆகியோர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com