வாணியம்பாடி அருகே முள்புதரில் பதுக்கி வைத்திருந்த 1,200 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி கிராமிய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு நேதாஜி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸாரை கண்டதும் இருவர் ஓடுவதைப் பார்த்து சந்தேகமடைந்து, அங்கு சென்று பார்த்தனர். அங்குள்ள முள்புதரில் எரிசாராய கேன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து தலா 35 லிலிட்டர் கொள்ளளவு கொண்ட 34 கேன்களில் 1,200 லிட்டர் எரிசாராயத்தை போலீஸார் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவான 2 பேரைத் தேடி வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் நேதாஜி நகர் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 150 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5,300 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்ட குறிப்பிடத்தக்கது.