வேலூர்
ஆம்பூர் அருகே கனமழையால் சாலை சேதம்
ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சியில் கனமழை காரணமாக ஊட்டல் தேவஸ்தானத்துக்குச் செல்லும் சாலை சேதமடைந்தது.
ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சியில் கனமழை காரணமாக ஊட்டல் தேவஸ்தானத்துக்குச் செல்லும் சாலை சேதமடைந்தது.
மிட்டாளம் ஊராட்சி, ஊட்டல் வனப்பகுதியில் ஊட்டல் தேவஸ்தானம் உள்ளது. தேவஸ்தானத்தில் சரஸ்வதி, விநாயகர், ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர், நந்தி, கன்னிக்கோவில் என தனித்தனித் தனி சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலுக்கு வனப்பகுதி வழியாக தார்ச்சாலை செல்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ரூ. 20 லட்சம் செலவில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு சாலை சேதமடைந்தது. இதனால் இவ்வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும்.
எனவே, சேதமடைந்துள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.