ராணிப்பேட்டை மின் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் யாரும் வராததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ராணிப்பேட்டை மின் கோட்டத்துக்கு உள்பட்ட ஆற்காடு, வாலாஜாபேட்டை, சிப்காட் உள்ளிட்ட பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் ராணிப்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, கோட்டப் செயற்பொறியாளர் அ.உதயனன் தலைமை வகித்தார். வேலூர் வட்ட மேற்பார்வையாளர் (பொறுப்பு) கோ.சித்ரா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் ஒரே ஒரு மின் நுகர்வோர் மட்டும் பங்கேற்று வாய்மொழியாக தனது குறையைக் கூறிவிட்டு வெளியே சென்றார்.
இந்நிலையில், கூட்டத்துக்கு மின் நுகர்வோர் யாரும் வராததால் மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து ஆலோசனைக் கூட்டமாக மாற்றப்பட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை
நடத்தப்பட்டது.