வாணியம்பாடி தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் நீலோபர் கபீல் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
வாணியம்பாடி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவும், தமிழக தொழிலாளர் நலத் துறை அமைச்சருமான நீலோபர் கபீல் தலைமையில் வாணியம்பாடி தொகுதி வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் நகராட்சி ஆணையர் கோபு, ஆலங்காயம், திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி ஆகிய ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.
தொகுதி முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள் குறித்து 3 மணி நேரத்துக்கு மேல் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் தற்போது நடைபெற்று வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.