கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள பிள்ளையார் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள பிள்ளையார் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தின் பின்புறம் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. அதற்கு அடுத்தடுத்து ஆம்பூர் கிளை சிறை, ஆம்பூர் நீதிமன்ற வளாகம் ஆகியவை உள்ளன. பிள்ளையார் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் சென்றபோது உண்டியல் உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 
இதுகுறித்து ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com