பொதுத் தேர்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற 53 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற 53 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வேலூர் சுவாமி விவேகானந்தர் பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அண்ணாமலையார் அறக்கட்டளைத் தலைவர் கு.சரவணன் தலைமை வகித்தார். தொழிலதிபர் ஆர்.எஸ்.சேகர் முன்னிலை வகித்தார். சரஸ்வதி வித்யா பள்ளி நிர்வாகி நாகராஜன் வரவேற்றார். ஆரோக்கிய பாரதி அமைப்பின் மாநிலப் பொறுப்பாளர் என்.ராஜதுரை, தொழிலதிபர்கள் எம்.டி. பாஸ்கர், தர்மிசந்த் ஆகியோர் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற 53 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 159 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். இதில், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com