ஆம்பூரில் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீனு (30). தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனவேதனையில் சீனு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆம்பூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.