ஆற்காடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தாழனூர் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஊராட்சிச் செயலாளர் கே.தேவராஜ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் வி.நந்தகுமார், அவைத் தலைவர் வ.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பி.மோகன் வரவேற்றார்.
வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.காந்தி
எம்எல்ஏ, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்எல்ஏ ஆகியோர் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிப்பேசினர்.
இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.