மாதனூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்வதற்காக ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மாதனூர் அருகே அகரம்சேரி அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டடத்தில் மாதனூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாற்காலிமாக இயங்கி வருகிறது. இக்கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
மாதனூர்-ஒடுக்கத்தூர் சாலையில் அகரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள இடத்தில் கல்லூரி கட்டுவதற்காக தகுந்த இடம் உள்ளதா என ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், ஆம்பூர் வட்டாட்சியர் சாமுண்டீஸ்வரி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அன்பரசன் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.