வேலூரில் இன்று பிஎஸ்என்எல் சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் சார்பில் புதன்கிழமை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பிஎஸ்என்எல் சார்பில் புதன்கிழமை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறிக்கு வேலூர் முதன்மைப் பொது மேலாளர் கே.வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
வேலூரில் தலைமை தபால் நிலையம் எதிரில், ஆர்.டி.ஓ சாலையிலுள்ள ஆட்டோ நிறுத்தும் இடம், சத்துவாச்சாரி மோர் சூப்பர் மார்க்கெட், கல்புதூர் பிஎஸ்என்எல் தொலைபேசி நிலையம், காட்பாடி எல்ஐசி அலுவலகம் எதிரே, விஷ்ணு தியேட்டர் அருகில், ஆம்பூரில் நேதாஜி சாலை, அய்யனார் மேம்பாலம், குடியாத்தத்தில் புதிய பேருந்து நிலையம், நேதாஜி சவுக், ஒடுகத்தூர், ராணிப்பேட்டையில் வாலாஜாபேட்டை பதிவாளர் அலுவலகம், ஆற்காடு பேருந்து நிலையம், சோளிங்கர் தபால் நிலையம் அருகில் ஆகிய இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 
இதில், புதிய தரைவழி இணைப்பு, இணையதள இணைப்பு, சிம்கார்டு விற்பனை, எம்.என்.பி. சேவை, செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது போன்ற சேவைகளும் வழங்கப்படுகிறது. மேலும், மார்ச் 21 முதல் 30-ஆம் தேதி வரை ரூ. 110 மதிப்பில் முழு "டாக் டைம்' பெறலாம். பொதுமக்கள் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com