கே.வி. குப்பம் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கே.வி. குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி வளாகத்தில் அந்த வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது.
இங்கு, வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஒரு மர்ம நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்றார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற சிலர் சப்தம் கேட்டு நின்றுள்ளனர்.
அவர்களைப் பார்த்ததும் மர்ம நபர் தப்பியோடி விட்டார். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், கே.வி. குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்
கொண்டுள்ளனர்.