வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஜப லஷ்மி குபேர யக்ஞம் புதன்கிழமை தொடங்கியது.
தன்வந்திரி பீடத்தில் கடந்த 12 முதல் 14-ஆம் தேதி வரை பீடாதிபதி முரளிதர சுவாமிகள் தலைமையில் பவித்ரோற்சவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யம், ஆரோக்யம் வேண்டி 14 முதல் 25-ஆம் தேதி வரை ஜப குபேர யக்ஞம் தொடங்குகிறது. ஒரு கோடி தாமரை விதைகளைக் கொண்டு கோடி ஜப லக்ஷ்மி குபேரர் யக்ஞத்தின் பூர்வாங்க பூஜைகள் புதன்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கியது. இதில் தமிழகம், வெளி மாநிலத்தவர், மற்றும் வெளிநாட்டினர் பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.