ஆம்பூர் அருகே கரும்பூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் பேபி இந்திரா தலைமை வகித்து, 37 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆம்பூர் வட்டாட்சியர் சுஜாதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் முரளி, வட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். வருவாய் ஆய்வாளர் நதியா நன்றி கூறினார்.
வாணியம்பாடியில்...
நாட்டறம்பள்ளி வட்டம், பணியாண்டபள்ளி மற்றும் புத்தகரம் ஊராட்சிக்களுக்கான சிறப்பு மனுநீதிநாள் முகாம் ஜெயபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு வட்டாட்சியர் குமார் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் தீர்த்தகிரி வரவேற்றார். தனித் துணை ஆட்சியர் (சிப்காட் நிலம் எடுப்பு) வி.அல்லி 23 பயனாளிகளுக்கு ரூ. 12 லட்சத்து 69 ஆயிரத்து 453 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி அரசு நலத் திட்டங்கள் குறித்து பேசினார்.
முகாமில் வருவாய் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீசன் மற்றும் வருவாய்த் துறையினர் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூரில்...
ஜோலார்பேட்டை ஒன்றியம், ஏலகிரி ஊராட்சிக்கு உள்பட்ட ஏலகிரி கிராமத்துக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் அரசு நடுநிலைப் பள்ளி அருகே நடைபெற்றது.
முகாமிற்கு, திருப்பத்தூர் சார்-ஆட்சியர் பி.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் வள்ளியம்மாள், தனி வட்டாட்சியர் பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் சத்தியமூர்த்தி வரவேற்றார்.
இதில், 72 பயனாளிகளுக்கு ரூ. 14 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை சார்-ஆட்சியர் பி.பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
முகாமில், வருவாய் ஆய்வாளர் ஹரிதாஸ், கிராம நிர்வாக அலுவலர் மதுசூதனன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆற்காட்டில்...
ஆற்காடு வட்டம், மோசூர், பாளையம் ஊராட்சிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் மோசூர் கிராமத்தில் நடைபெற்றது.
ராணிப்பேட்டை சார்-ஆட்சியர் இளம்பகவத் தலைமை வகித்தார். ஆற்காடு வட்டாட்சியர்கள் சுமதி, சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 93 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில், திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் வேதமுத்து உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.