அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல்

ஆற்காடு அருகே குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில்  ஈடுபட்டனர்.

ஆற்காடு அருகே குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில்  ஈடுபட்டனர்.
ஆற்காட்டை அடுத்த காவனூர் ரேணுகம்பாள் நகரில் கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அடிப்படை வசதிகளும் சரியாக செய்து தரப்படவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் ஆற்காடு-காவனூர் சாலையில் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். 
தகவலறிந்த திமிரி போலீஸார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com