வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அகில உலக புரோகிதர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களின் நலனுக்காக தன்வந்திரி யாகம், ஒரு கோடி குபேர ஜப ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பீடாதிபதி முரளிதர சுவாமிகள் தலைமையில் காலை 6 மணியளவில் மங்கள வாத்தியம், கோ பூஜை, சூரிய நமஸ்காரம், விக்னேஸ்வர பூஜை, கணபதி யக்ஞம், நவக்கிரக யக்ஞம், நாராயண யக்ஞம், லக்ஷ்மி யக்ஞம், ஹயக்ரீவர் ஹோமம், காலபைரவர் ஹோமம், ஒரு கோடி குபேர ஜப ஹோமம், பூர்ணாஹுதி ஆகியன நடைபெற்றன. இதில், புரோகித சங்கத் தலைவர் வேலூர் சீதாராமன், பொருளாளர் கோபாலன், உப தலைவர் கீ.எல். கிருஷ்ணமூர்த்தி, பா.சேகர், பி. ஆர்.கணேஷ், சிதம்பரம் குஞ்சிதபாகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.