ஒசூர் அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது

ஒசூர் அருகே பாகலூரில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

ஒசூர் அருகே பாகலூரில் கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
 ஒசூர் அருகே பாகலூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாகலூர் காவல் ஆய்வாளர் செந்தில் உள்பட போலீஸார் பாகலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சர்ஜாபுரம் சாலையில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனர். அவரிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அவரிடம் விசாரித்தபோது அவர் கர்நாடக மாநிலம், சம்பங்கிரியைச் சேர்ந்த வெங்கடேஷ் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com