ஒசூரில் கடன் தொல்லையால், உணவு விடுதி உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒசூர் ரெயின்போ கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வீரகுமார் (34). இவர் ஒசூரில் உணவு விடுதி நடத்தி வருகிறார். தொழில் நசிந்து கடன் வாங்கி உணவு விடுதியை நடத்தி வந்த நிலையில், கடன் தொல்லை காரணமாக அவர் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அட்கோ காவல் உதவி ஆய்வாளர் காந்திமதி நிகழ்விடத்துக்கு சென்று உடலை கைப்பற்றினார். இதுகுறித்து அட்கோ காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.