காவேரிப்பட்டணம் அருகேயுள்ள மலையாண்ட அள்ளியில் மாவட்ட அளவிலான சட்ட ஆலோசனை முகாம், மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, மாவட்ட சட்ட ஆலோசனை மையம், சுவார்டு தொண்டு நிறுவனம் ஆகிய இணைந்து நடத்திய முகாமில் மாவட்ட நீதிபதி கே.அறிவொளி, சார்பு நீதிபதி தஸ்னம் ஆகியோர் சட்ட விழிப்புணர்வு குறித்து விளக்கினர். வட்டார மருத்துவர் ஹரிராம், சுவார்டு தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஜலாலுதீன், தலைமை ஆசிரியர் சின்னசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.