கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சின்னாறு அணையில் மணல் கொள்ளை தொடர்பாக சார்-ஆட்சியர் சந்திரகலா விசாரணை நடத்தினார்.
சூளகிரி சின்னாறு அணை நீரின்றி வறண்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் ஜேசிபி இயந்திரம், டிராக்டர் மூலம் மணலை அள்ளிச் செல்கின்றனர். இதையறிந்த ஓசூர் சார் -ஆட்சியர் சந்திரகலா, வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினருடன் சின்னாறு அணைக்கு திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார் . அப்போது மணல் கொள்ளையைத் தடுக்க தவறிய சூளகிரி கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்யப்பட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
சூளகிரி சின்னாறு அணையைப் பார்வையிடும்போது சார் -ஆட்சியர் சந்திரகலாவுடன், வட்டாட்சியர் பெருமாள் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.