கிருஷ்ணகிரி அருகே உள்ள கால பைரவர் கோயிலின் கும்பாபிஷேக விழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரையில் உள்ள கல்லுக்குறிக்கி காலபைரவர் கோயிலின் 807-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா ஜூன் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவானது கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்வில் கோயில் அறக்கட்டளைத் தலைவர் ஜெயவேல், கௌரவத் தலைவர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.