ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன் தலைமை வகித்து பேசியது:
ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பேச்சு, பட்டிமன்றம், கவிதை அரங்கம், கலை அரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை செம்மையாக நடத்த வேண்டும்.
ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முன்னாள் நகராட்சித் தலைவர் குருசாமி, செயலர் மாரிமுத்து ஆகியோர் ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றத்திலிருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகளை மீண்டும் மன்றத்தில் இணைத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
விழாவில் திமுக மாவட்ட இலக்கிய அணி தலைவர் எல்லோரா.மணி, முன்னாள் சென்னத்தூர் ஊராட்சித் தலைவர் ராமாஞ்சி ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com