கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் குரூப் -2 போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் - 2 போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்த பயிற்சியை மாவட்ட மைய நூலக முதல் நிலைய நூலகர் கோபாலசாமி தொடங்கிவைத்தார்.
மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி, உயிரியல் பேராசிரியர் ராஜசேகர், உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட மைய நூலகத்தில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. மாணவ, மாணவிகளின வசதிக்காக நூலகத்தில் இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேர பயன்பாட்டுக்கு ரூ.10ம், அரை மணி நேரத்திற்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இலவசமாக மின் பருவ இதழ் படிக்கும் வசதியும், மின் புத்தகம் வசதியும் செய்யப்பட்டுள்ளது. போட்டி தேர்வுக்கு தனிப்பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர்களை மாவட்ட மைய நூலகத்தில் 04343-236643 என்ற தொலைபேசி எண்ணிலும், ந்ஞ்ழ்ர்ல்ஹஸ்ரீஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின் அஞ்சல் முவரியிலும் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட மைய நூலகர் கோபால்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.