டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராட்டம்

தேன்கனிக்கோட்டை அடுத்த லக்கசந்திரத்தில் டாஸ்மாக் கடையை மூட கோரி அப்பகுதி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேன்கனிக்கோட்டை அடுத்த லக்கசந்திரத்தில் டாஸ்மாக் கடையை மூட கோரி அப்பகுதி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தேன்கனிக்கோட்டை வனத் துறை சோதனைச்சாவடி அருகே இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டு, அஞ்செட்டி- தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள லக்கசந்திரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
 இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது. எனவே, இக் கடையை மூட வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறை அதிகாரிகள் சமரசம் செய்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com