தேன்கனிக்கோட்டை அடுத்த லக்கசந்திரத்தில் டாஸ்மாக் கடையை மூட கோரி அப்பகுதி பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை வனத் துறை சோதனைச்சாவடி அருகே இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டு, அஞ்செட்டி- தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள லக்கசந்திரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது. எனவே, இக் கடையை மூட வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த் துறை அதிகாரிகள் சமரசம் செய்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.