தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க மாவட்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க மாவட்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஊத்தங்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு அச் சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் தலைமை வகித்து பேசியது:
 பள்ளிக் கல்வி மானிய கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றுகூட ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக இல்லை. புதிய ஒய்வூதியத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும்.
 பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரமாக்க வேண்டும். நடுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு அளித்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடில் அனைத்து ஆசிரியர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.
 கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் இரா.சண்முகம், மாவட்ட பொருளாளர் செ.சரவணன், மாவட்ட சட்ட ஆலோசகர் சீ.சிவக்குமார், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் தெü.சம்சு,மாவட்ட துணைச் செயலாளர்,சரவணன், ஊத்தங்கரை ஒன்றியத் தலைவர் மாருதி,ஒன்றியச் செயலாளர் காசிநாதன், ஒன்றிய பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com