மத்தூர் அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணைத் தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
மத்தூர் அருகே உள்ள சாணிப்பட்டி கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவமூர்த்தி மனைவி விஜயா (32). இவர் வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த தணிகாசலம் மகன் சிவசக்தி கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த விஜயா, மத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்தி வழக்குப் பதிவு செய்த மத்தூர் போலீஸார் சிவசக்தியைக் கைது செய்தனர்.