ஊத்தங்கரை அருகே வன விலங்குகளை வேட்டையாடியவரை வனத் துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் நாகேஷுக்கு கிடைத்த தகவலின்படி, தருமபுரி மண்டல வனப் பாதுகாவலர் வேணுபிரசாத் உத்தரவின் பேரில், கல்லாவி பிரிவு வனவர் துரைகண்ணு தலைமையில் வனக்காப்பாளர்கள் அசோகன், வெங்கடேசன், சண்முகசுந்தரம் ஆகியோர் கொண்ட தனிக் குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, உடும்பு, முயலை வேட்டையாடி விற்பனைக்கு கொண்டு வந்த வெள்ளிமலையைச் சேர்ந்த ராமநாதனை (42) கைது செய்து போச்சம்பள்ளி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். தலைமறைவான சுந்தர்ராஜை தேடி வருகின்றனர்.