அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி நிறைவு சான்றிதழ் அளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தில் படித்த குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி நிறைவு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், திங்கள்கிழமை வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தில் படித்த குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி நிறைவு சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், திங்கள்கிழமை வழங்கினார்.
 கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் மக்கள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 235 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர், தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 ஒருங்கிணைந்தக் குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 1,796 அங்கன்வாடி மையங்களில் படித்து 5 வயது நிறைவடைந்த 6,784 குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி நிறைவு சான்றிதழ்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார்.
 மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு தனி நபர் தொழில் தொடங்க 74 பேருக்கு தலா ரூ.7,500 வீதம் மொத்தம் ரூ.5.55 லட்சத்துக்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.
 அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, நலப்பணிகள் இணை இயக்குநர் அசோக்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குநர் பிரியாராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் புஷ்பலதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com