குடும்பத் தகராறில் 4 பேர் கைது

போச்சம்பள்ளி அருகே குடும்பத் தகராறில் கணவரைத் தாக்கியதாக மனைவி உள்பட 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

போச்சம்பள்ளி அருகே குடும்பத் தகராறில் கணவரைத் தாக்கியதாக மனைவி உள்பட 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 போச்சம்பள்ளியை அடுத்த தொப்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாது மகன் மனோஜ்குமார். இவருக்கும் நவீனா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
 இதையடுத்து நவீனாவின் உறவினர்கள் அபிமன்யு, முரளி, மாதேஷ், முருகன் ஆகியோர் மனோஜ்குமார் மற்றும் அவரது தந்தையை தாக்கியதாக போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் போச்சம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மனோகரன் வழக்குப் பதிவு செய்து அபிமன்யு, முரளி, மாதேஷ், முருகன், நவீனா உள்ளிட்ட ஐந்து பேரின் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர். தப்பியோடிய முருகன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com