கிருஷ்ணகிரியில் ஜூன் 30}ஆம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் ஜூன் 30}ஆம் தேதி காலை 11 மணி அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.