போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர்த் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போச்சம்பள்ளி பேருந்து நிலைய வளாகத்தில் குடிநீர் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள குடிநீர்த் தொட்டி பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளதால் அதன் எதிரில் கடைகள் அமைக்கப்பட்டு பயன்பாடின்றி உள்ளது.
அந்த தண்ணீர்த் தொட்டியைப் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் பொதுமக்கள் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கின்றனர். எனவே தண்ணீர்த் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.