குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ்  ஒருவர் சிறையில் அடைப்பு

ரேஷன் அரிசி கடத்தலில்  தொடர்ந்து ஈடுபட்டு வந்த வரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க  மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் செவ்வாய்க்கிழமை  உத்தரவிட்டார்.

ரேஷன் அரிசி கடத்தலில்  தொடர்ந்து ஈடுபட்டு வந்த வரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க  மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் செவ்வாய்க்கிழமை  உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டம்,  நாட்றம்பள்ளி வட்டம்,  அரசமர வட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (38).  இவர் மீது ரேஷன் அரிசி  கடத்தியதாக பல வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், கிருஷ்ணகிரி  அருகே கடந்த 1}ஆம் தேதி  ரேஷன் அரிசி கடத்தியதாகக் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து,  தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த  கனகராஜை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் முருகன் அளித்த பரிந்துரையை ஏற்று, கனகராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com